ரயில் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி.. சென்னையில் மின்சார ரயில் சேவை பாதிப்பு
சென்னையில் மின்சார ரயில் டிரைவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் பாதி வழியிலேயே ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் 20 நிமிடம் கழித்து மீண்டும் அந்த ரயில் புறப்பட்டுச் சென்றது.
Subscribe to Oneindia Tamil
சென்னை: ரயில் டிரைவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் தாம்பரம் சென்ற மின்சார ரயில் திடீரென நிறுத்தப்பட்டது. பின்னர் 20 நிமிடத்திற்கு பிறகு அந்த வழியில் மீண்டும் ரயில்கள் இயக்கப்பட்டன.

சென்னையிலிருந்து தாம்பரம் நோக்கி சென்ற மின்சார ரயிலின் டிரைவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனால் அந்த ரயில் பல்லாவரத்தில் பாதி வழியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் அந்த மார்க்கத்தில் சுமார் 20 நிமிடமாக ரயில்கள் இயக்கப்படவில்லை. பின்னர் மாற்று டிரைவரின் மூலம் ரயில் இயக்கப்பட்டது.
திரிசூலம் அருகே ரயில் வந்த போது அடையாளம் தெரியாதவர் கல்வீசிய அதிர்ச்சியால் டிரைவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications