தீண்டாத்திருமேனியனே.. ஆன்மீக இசை குறுந்தகடு வெளியீட்டு விழா!
சென்னையில் அன்னபூரணி கிரியேஷன்ஸ் சார்பில் தீண்டா திருமேனியனே இசை குறுந்தகடு வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
சென்னை: வடபழனி வேங்கிஸ்வரர் கோவிலில் அன்னபூரணி கிரியேஷன்ஸ் சார்பில் தீண்டாத் திருமேனியனே ஆன்மீக இசை குறுந்தகடு வெளியீட்டு விழா கோலாகலமாக நடைபெற்றது.
திருப்பாசூர், திருமால்பூர், திருவாலங்காடு, திருநின்றவூர், கூவம் ஆகிய திருத்தலப்பெருமை புகழ்பாடும் தீண்டா திருமேனியன் சுயம்பு வரலாறு அடங்கிய பாடல்களை தொகுத்து இசைக் குறுந்தகடு வெளியிடப்பட்டது.
சென்னை வடபழனி வேங்கிஸ்வரர் கோவிலில் இந்த விழா நடைபெற்றது.

மதநல்லிணக்க கூட்டமைப்பு தேசிய தலைவர் சிவக்குமார், இசைக்குறுந்தகட்டை வெளியிட மஹாகுரு மகாலிங்கம் குருசாமி, அகத்தீஸ்வர யோக சித்ராலயத்தின் அரவிந்தன் மற்றும் திருவாச மன்ற தலைவர் மணிவாசகம் ஆகியோர் குறுந்தகட்டை பெற்றுக்கொண்டனர்.
இந்த 10 பக்தி பாடல்களையும் கவிஞர்கள் மாத்தூர் சந்திரசேகர், சிவபாஸ்கர் ஆகியோர் எழுதியுள்ளனர். கருமாரி கர்ணா, எஸ்பிபி ராம், அம்ருதா, பவன், ஏழுமலை, சிவபாஸ்கர் ஆகியோர் பாடல்களை பாடியுள்ளனர்.

இந்த பக்தி ஆல்பத்திற்கு தெய்வீக இசைத்தென்றல் கருமாரி கர்ணா இசையமைத்துள்ளார். இதனை இயக்குநர் கலைமணி இயக்கியுள்ளார்.
இந்த இசை வெளியீட்டு விழாவில் தெய்வீக இசைத்தென்றல் கருமாரி கர்ணாவின் பக்தி இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களுக்கு தீண்டாத் திருமேனியனே பக்திபாடல் குறுந்தகடு மற்றும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.












Click it and Unblock the Notifications