நீ கில்லாடின்னா நான் கேடி மச்சி... ஃபேனுக்குள் ஒளித்து வைத்த நகையை அபேஸ் செய்த திருட்டுப் பசங்க!
புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு ஊழியர் ஒருவர், பலத்த புத்திசாலித்தனமாக மின்விசிறிகளில் மறைத்து வைத்துச் சென்றிருந்த நகைகளை திருடர்கள் படு கில்லாடித்தனமாக கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோடை விடுமுறை தொடங்கி விட்டதால் உறவினர் வீடுகளுக்கு செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், வீட்டை பூட்டி விட்டு சென்றால் கொள்ளை சம்பவங்கள் நடக்கலாம் என்ற அச்சம் மக்களிடையே இருக்கத் தான் செய்கிறது. அதற்காக செல்லும் இடங்களுக்கெல்லாம் வீட்டிலுள்ள நகை, பணத்தை எடுத்துச் செல்ல முடியாது.

எனவே, திருடர்களை ஏமாற்ற புதுச்சேரி அரசு ஊழியர் ஒருவர் நூதன ஐடியா ஒன்றை மேற்கொண்டார். ஆனால், அவரை விடவும் புத்திசாலியாக யோசித்து, அந்த நகைகளை திருடர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளதுதான் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
புதுச்சேரி சண்முகாபுரம் அண்ணாவீதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (34). இவர் காரைக்காலில் புதுவை அரசின் கால்நடைத்துறையில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி சரளா. இவர் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் மருந்தாளுனராக பணியாற்றி வருகிறார்.
கடந்த 17ம் தேதி குடும்பத்துடன் திருப்பதி புறப்பட்டுச் சென்றார் வேல்முருகன். முன்னதாக வீட்டில் இருந்த நகைகளை எல்லாம் பாதுகாப்பாக, மின்விசிறிகளில் உள்ள கப்புக்குள் போட்டு ஒளித்து வைத்தார் அவர். நகைகள் அதில் இருந்து கீழே விழுந்துவிடாமல் இருக்க அதன் மீது டேப்பை போட்டு ஒட்டியுள்ளார். இனிமேல் ஒரு பயலும் நகையைத் திருட முடியாது என்று பெருத்த நம்பிக்கை வந்தது அவருக்கு. அதன்பின் திருப்பதிக்கு புறப்பட்டு சென்ற வேல்முருகன், நேற்று அதிகாலையில் புதுச்சேரி திரும்பினார்.
வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் கதவு திறந்து கிடந்தது. அவர் அறைக்குள் சென்றபோது அங்கு பீரோவில் இருந்த துணிகள் எல்லாம் சிதறி கிடந்தன. இதனால் பதறிப்போன அவர் நகைகளை வைத்த மின்விசிறிகளை கவனித்தார்.
அந்த மின்விசிறிகளின் இறக்கைகள் அனைத்தும் மடக்கப்பட்டு, அதில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகைகள் அனைத்தும் திருடப்பட்டிருந்தன.
வீடு முழுவதும் நகைகளைத் தேடிய திருடர்கள், அனைத்து மின்விசிறியிலும் ஒட்டப்பட்டிருந்த டேப்களால் சந்தேகப்பட்டு அவற்றைப் பிரித்து பார்த்து நகைகளைத் திருடியிருக்க வேண்டும் என கருதப்படுகிறது. திருடப்பட்ட நகைகளின் மதிப்பு 85 பவுன் என வேல்முருகன் போலீசில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் வழக்குப்பதிவு செய்து, நூதன முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகிறார்.
சம்பவ இடத்துக்கு கைரேகை நிபுணர்களும் விரைந்து வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர். அவற்றை பழைய குற்றவாளிகளின் கைரேகைகளோடு ஒப்பிட்டு குற்றவாளிகளை கண்டறியும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
திமுகவிடம் பணியக்கூடாது.. உதயசூரியன் வேண்டாம்.. கமலிடம் சொன்ன நிர்வாகிகள்!












Click it and Unblock the Notifications