குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்வு
குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து இருக்கிறது.
மதுரை: குரங்கணி காட்டுத்தீயில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்து இருக்கிறது.
கடந்த மார்ச் 11ம் தேதி, தேனி அருகே குரங்கணி காட்டுப்பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டது. இந்த காட்டுத்தீ கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவி வந்தது. இந்த பகுதியில் மலையேறும் பயிற்சியில் ஈடுபட சென்னை, கோவை, ஈரோடு மாணவிகள் வந்திருந்தனர்.

இதில் மொத்தம் 39 பேர் தீயில் சிக்கிக் கொண்டனர். தீவிரமான மீட்பு பணிகளுக்கு பிறகு 30 பேர் உயிருடன் மீட்கப்பட்டார். அப்போது 9 பேர் மரணம் அடைந்தனர்.
மீதமுள்ளவர்கள் காயமடைந்த நபர்கள் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்கள். சிலர் சென்னையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த நிலையில் நாளுக்கு நாள் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தற்போது உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயரந்து இருக்கிறது. சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த சுவேதா என்ற இளம்பெண் மரணம் அடைந்துள்ளார்.












Click it and Unblock the Notifications