நான் ரவீந்திரநாத் குமார்.. மோடியின் மண்ணிலிருந்து வந்திருக்கிறேன்.. அமெரிக்காவை அதிரவைத்த தேனி எம்பி
அமெரிக்காவில் தேனி எம்பி ரவீந்திரநாத் குமார் பேசியதை கைதட்டி வரவேற்றனர்
Recommended Video
சென்னை: "நான் மோடியின் மண்ணான இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன்"... தேனி எம்பி ஓபி. ரவீந்திரநாத் குமார் இப்படி சொன்னதுதான் தாமதம்.. கூடியிருந்தோர் ஆச்சரியத்திலும், உற்சாகத்திலும் கை தட்டி மகிழ்ச்சியுடன் அதை வரவேற்றனர்.
பிரதமர் மோடியின் தீவிர ரசிகராகவே மாறி விட்டார் ரவீந்திரநாத் குமார். மோடியை வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் புகழ்வதற்கு அவர் தவறுவதில்லை. நாடாளுமன்றத்தில் உரையாற்றியபோதே அத்தனை பேரையும் அசரடித்தவர் ரவீந்திரநாத் குமார்.
இப்போதும் கூட கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் மோடியை புகழ்ந்து பேசுவதற்கு அவர் தவறுவதில்லை. அந்த அளவுக்கு ரவீந்திரநாத் குமாருக்கு மோடி மீது பிரியம் ஜாஸ்தி.

தங்க தமிழ்செல்வன்
இப்போது தனது தந்தை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துடன் அமெரிக்கா வந்துள்ளார் ரவீந்திரநாத் குமார். இங்கு ஓபிஎஸ்ஸுக்கு தங்க தமிழ் மகன் விருதும், சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருதும் கிடைத்துள்ளது. இதனால் அவரது ஆதரவாளர்கள் பெரும் உற்சாகத்துடன் உள்ளனர்.

மோடியின் மண்
சர்வதேச வளரும் நட்சத்திரம் ஆசியா விருது விழாவில் கலந்து கொண்டு பேசியவர்களில் ரவீந்திரநாத் பேச்சுதான் செமையாக இருந்தது. இந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, "நான் ரவீந்திரநாத் குமார். மோடியின் மண்ணான இந்தியாவிலிருந்து வந்திருக்கிறேன்" என்று அவர் ஆரம்பமே அசத்தலாக ஆரம்பித்தார். கூட்டத்தினர் கைத்தட்டி வரவேற்றனர்.

நாடாளுமன்றம்
தொடர்ந்து ரவீந்திரநாத் குமார் பேசுகையில், நான் முதல் முறையாக தேர்தலில் நின்று வென்று இந்திய நாடாளுமன்றத்திற்குச் சென்றிருக்கிறேன். அதிமுக கூட்டணியில் நான் மட்டுமே வென்று சென்றுள்ளேன். எனக்கு முதல் முறை நாடாளுமன்றத்தில் பேசும்போது நடுக்கமாகவே இருந்தது. காரணம் நான் தனி ஆளாக போயிருக்கிறேன். ஆனால் அதன் பிறகு அந்த நடுக்கம் பயம் குறைந்து தொடர்ந்து 28 மசோதாக்கள் மீது பேசியுள்ளேன்.

சந்தோஷம்
எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்க முக்கியக் காரணம் எனது கட்சியான அதிமுகதான். அதிமுகவுக்கு இந்த தருணத்தில் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன் என்று ரவீந்திரநாத் பேசியுள்ளார். அவரது பேச்சு தந்தையாக ஓபிஎஸ்ஸுக்கு மிகப் பெரிய சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம்.

எடப்பாடி பழனிசாமி
இதற்கிடையே, மோடியின் மண் என்று ரவீந்திரநாத் குமார் பேசியதை சிலர் சர்ச்சையாக்கி வருகின்றனர். இது முதல்வர் காதுக்கும் கூட போயிருக்கிறதாம். ஆனால் "அதில் என்ன தவறு இருக்கிறது. மோடிதானே தற்போது இந்தியாவின் பிரதமராக இருக்கிறார். எனவே அந்த அர்த்தத்தில் அவர் பேசியிருக்கிறார். இதில் தவறே இல்லை" என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதை நிராகரித்து விட்டாராம்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications