சென்னையை மிரட்டும் 85,000 தெரு நாய்கள்... கணக்கெடுப்பில் அதிர்ச்சித் தகவல்!
சென்னை: சென்னையில் மட்டும் சுமார் 85 ஆயிரம் தெருநாய்கள் உள்ளதாக சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் மூலம் தெரிய வந்துள்ளது.
கடந்த சிலநாட்களுக்கு முன்னர் மூலக்கொத்தளம் சுடுகாட்டில் புதைக்கப் பட்டிருந்த அனாதை பிணமொன்றை நாய்கள் வெளியே எடுத்து கடித்துப் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் சுற்றித் திரியும் தெருநாய்களைப் பிடிக்க மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுக்கப் பட்டது.
மேலும், பிணத்தை சரியாக புதைக்காத ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையே சென்னை மாநகரில் சுமார் 85 ஆயிரம் தெருநாய்கள் சுற்றித் திரிவதாக தெரிய வந்துள்ளது.

கணக்கெடுப்பு...
கடந்த மே 30ம் தேதி சென்னையில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் ஒரே நாளில் தெருநாய்களைக் கணக்கெடுக்கும் பணி நடந்தது.

85 ஆயிரம் தெருநாய்கள்...
இதன் மூலம், சென்னை முழுவதும் சுமார் 85 ஆயிரம் தெருநாய்கள் சுற்றித் திரிவது கண்டுபிடிக்கப் பட்டது.

விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகள்...
அதிலும் குறிப்பாக விரிவாக்கம் செய்யப் பட்ட பகுதியில் அதிக தெருநாய்கள் உள்ளதாக தெரிய வந்துள்ளது. மண்டலம் வாரியான தெருநாய்கள் விபரம் வெளியிடப்படவில்லை.

விரைவில் நடவடிக்கை...
கணக்கெடுப்பைத் தொடர்ந்து விரைவில் தெருநாய்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.












Click it and Unblock the Notifications