வட தமிழகத்தில் கனமழை பெய்யும்.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: வட தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன், இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மத்திய மேற்குவங்க கடல் பகுதியில் வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள மேலடுக்க சுழற்சி ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

இதன் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்துள்ளதாகவும் அவர் கூறினார். அதிகபட்சமாக புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் 11 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அடுத்த 24 மணிநேரத்தை பொறுத்தவரை வட தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் பாலச்சந்திரன் தெரிவித்தார். தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யலாம் என்றும் அவர் கூறினார்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரையில் ஜூன் 1 ம் தேதி முதல் செப் 25 வரை 39 சென்டி மீட்டர் மழை பெய்துள்ளது என்றும் இது இயல்பை விட 31 சதவீதம் அதிகம் என்றும் அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications