சிறையில் உயிருக்கு ஆபத்து... அச்சத்தில் கதறும் நிர்மலா தேவி... வக்கீல் 'பகீர்'
மதுரை மத்திய சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நிர்மலா தேவி அச்சம் அடைந்துள்ளதாக வழக்கறிஞர் தெரிவித்தார்.
Recommended Video

மதுரை: மதுரை மத்திய சிறையில் தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக நிர்மலா தேவி கூறியதாக அவரது வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.
பேராசிரியை நிர்மலா தேவி, விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் அவர் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் உயரதிகாரிகளுன் ஆசைக்கு இணங்க கல்லூரி மாணவிகள் 4 பேரிடம் வற்புறுத்தினார்.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக நிர்மலா தேவி மாணவிகளுடன் பேசிய ஆடியோ ஆதாரம் வெளியானது. இதையடுத்து புகாரின் பேரில் அருப்புக்கோட்டை போலீஸார் நிர்மலா தேவியை நேற்று முன்தினம் கைது செய்தனர்.

நீதிபதி உத்தரவு
பின்னர் விருதுநகர் குற்றவியல் நீதிமன்ற நீதிபதியின் வீட்டில் நிர்மலா நேற்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து அவரை ஏப்ரல் 28-ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தொழில் போட்டி
இதையடுத்து நிர்மலா தேவி மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரை அவரது வழக்கறிஞர் பாலசுப்பிரமணியன் சந்தித்து சிறையில் பேசினார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் இந்த பிரச்சினைக்கு காரணம் அருப்புக்கோட்டை கல்வி நிலையங்களில் இருக்கும் தொழில் போட்டிதான் ஆகும்.

பெரிதாக்குகின்றன
அருப்புக்கோட்டையை பொறுத்தவரை நிர்மலா தேவி பணியாற்றிய கல்லூரி நம்பர் 1 கல்லூரி. இந்த கல்லூரியின் மாணவர் சேர்க்கை பாதிக்க வேண்டும் என்பதற்காக மற்ற போட்டி கல்லூரி நிறுவனங்கள் இந்த விஷயத்தை ஊதி பெரிதாக்குவதாக நிர்மலா தேவி கூறினார்.

சிறைத் துறை மூலம் பாதுகாப்பு
சிறையில் சிறப்பு சலுகைகள் ஏதும் அவர் கேட்கவில்லை. சிறையில் அசாதாரணமான சந்தர்ப்ப சூழல்கள் இருக்கின்றன. இது எனது உயிருக்கு ஆபத்து என்பது போல் தோன்றுகிறது. இதை மீடியாவில் கூறி எனக்கு சிறைத்துறை மூலம் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று நிர்மலா தேவி என்னிடம் கூறினார்.

ஒட்டப்பட்டுள்ளது
உயிருக்கு ஆபத்து உள்ளது பற்றி நீதிமன்றத்தில் முறையிடப்படும். ஆடியோ நான் பேசியதுதான் ஆனால் அதில் சில விஷயங்கள் ஒட்டப்பட்டுள்ளது. ஆடியோ திரித்து பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறினார். சிறை அதிகாரிகள், வார்டன் உள்ளிட்டோர் இருந்ததால் என்னால் சரியாக பேசமுடியவில்லை. அவரை ஜாமீனில் எடுத்து பின்னர் அவரது செல்போனில் உள்ளது குறித்த ஆதாரங்கள் திரட்டப்படும் என்றார் அவர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications