தங்கத்திற்கும் கவரிங்கிற்கும் வித்தியாசம் தெரியாமல் ஆட்டையை போட்ட பங்குராஜா - வீடியோ
குன்னூரில் முகமது ரபீக் என்பவரது வீட்டில் தங்க நகைகள் என நினைத்து, கவரிங் நகைகளை பங்கு ராஜன் என்ற திருடன் திருடிச் சென்றுள்ளான்.
Subscribe to Oneindia Tamil
ஊட்டி: தங்கநகைகள் என நினைத்து கவரிங் நகைகளை திருடிச்சென்ற சென்ற பங்குராஜா என்ற திருடனை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.
குன்னூர் அண்ணாநகர் பகுதியில் வசித்து வருபவர் முகமது ரபீக். இவர் தன் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பினார். அப்போது அவரது வீட்டுக் கதவு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நகைகள் திருடப்பட்டிருந்தது.

கொள்ளையன் கொள்ளையடித்த நகைகள் பூராவும் கவரிங் நகைகள் என்பதை அறியாமல் கொள்ளையடித்துச் சென்றுள்ளான். முகமது ரபீக் வீட்டருகில் இருந்த சிசிடிவி கேமிராவில் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றது பங்கு ராஜன் என்கிற கொள்ளையன் என்பது போலீஸ் விசாரணையில் தெரிய வந்தது.
அதையடுத்து அண்ணாநகரிலேயே பதுங்கியிருந்த கொள்ளையன் பங்கு ராஜனை போலீசார் கைது செய்தனர். மேலும் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications