For Daily Alerts
Just In
பூட்டை உடைத்து திருட்டி ஈடுபட்ட 2 பேர் கைது – 20 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் மீட்பு
சென்னை: சென்னையில் பூட்டிய வீட்டை உடைத்து திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் மீட்கப்பட்டுள்ளன.
சென்னை மாங்காடு, போரூர், பூந்தமல்லி பகுதிகளில் பூட்டிய வீடுகளை உடைத்து கொள்ளை நடந்தது. கொள்ளையர்களை பிடிக்க உதவி கமிஷனர் செந்தில் குமரன், இன்ஸ்பெக்டர்கள் அமல்ராஜ், சார்லஸ் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.
அவர்கள் விசாரணை நடத்தி குரோம்பேட்டையை சேர்ந்த கொள்ளையன் கார்த்தி, அவனது கூட்டாளி நந்தகுமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூபாய் 20 லட்சம் மதிப்புள்ள நகைகள், கார், மோட்டார் சைக்கிள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களில் நந்தகுமார் வளசரவாக்கத்தில் தங்கி இருந்து சினிமா துறையில் வேலை செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
English summary
Thieves who engaged in theft were arrested by police in Chennai. 20 lakhs valued things confiscated from the thieves.