தனி நபராக 2 திருடர்களுடன் சிக்கித் தவித்த போலிஸ்காரர்.. உதவிக்கு வராத பொதுமக்கள்
சென்னை: சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இரண்டு திருடர்களை ஒரு போலீஸ்காரர் பிடிக்க முயன்றார். அப்போது திருடர்கள் இருவரும் சேர்ந்து போலீஸ்காரரை கடுமையாக தாக்கினர். ஆனாலும் விடாமல் தனி நபராக போராடினார் அந்த போலீஸ்காரர். இதனை அங்கு கூடியிருந்த மக்கள், பயணிகள் வேடிக்கை பார்த்தனரே தவிர ஒருவர் கூட போலீஸ்காரருக்கு உதவ முன்வரவில்லை.
சென்னையில் திருடர்கள் அட்டகாசம் பெருகிப் போய்க் கொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் வழிப்பறி, வீடு புகுந்து திருடுவது என்று திருடர்கள் அட்டகாசம் செய்து வருகின்றனர்.
சமீபத்தில் கூட மடிப்பாக்கம் பகுதியில் ஒரு திருடனை போலீஸார் பிடித்து விசாரித்துக் கொண்டிருந்தபோது அவன் தப்பி விட்டான். அவனைப் பிடிக்க ஒரு போலீஸ்காரர் முயன்றபோது அவருக்கு உதவ பொதுமக்கள் தரப்பில் யாருமே இல்லை. தனி நபராக போராடிய அவருக்கு அங்கிருந்த சிலர் உதவிக் கரம் நீட்டியும் கூட திருடனைப் பிடிக்க முடியாமல் போய் விட்டது.
இந்த நிலையில் நேற்று இரவு ஏழு மணியளவில் கோயம்பேடு பஸ் நிலையத்தில் இரண்டு திருடர்களிடம் சிக்கி ஒரு போலீஸ்காரர் படாதபாடு பட்டு விட்டார்.
கோயம்பேடு 100 அடி ரோட்டில் சங்கீதா ஓட்டல் அருகே நேற்று இரவு 7 மணியளவில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரே மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். வழிப்பறி கொள்ளையர்களான இருவரும் போலீசாரைக் கண்டதும் தப்பிக்க முயன்றனர்.
அப்போது லோகநாதன் (53) என்ற போலீஸ்காரர் 2 பேரையும் மடக்கி பிடித்தார். ஆனால் கொள்ளையர்கள் அவருடன் கட்டிப்புரண்டு சண்டை போட்டனர். பின்னர் அவரை தள்ளிவிட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். கொள்ளையர்கள் விட்டுச் சென்ற பல்சர் மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலீஸ்காரருடன் 2 பேர் கட்டிப்புரண்டு சண்டை போட்ட போது, அதனை அங்கிருந்த பொது மக்கள் வேடிக்கை பார்த்தனர். ஒருவர் கூட கொள்ளையர்களை பிடிப்பதற்கு முன் வரவில்லை என்று போலீஸ் தரப்பில் வேதனை தெரிவிக்கப்பட்டது.
-
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
மாஸ் லுக்கில் சிங்கப்பெண் அதிரடிப்படையினர்! முற்றிலும் வேறான சீருடை.. காரணம் இதுதான்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி












Click it and Unblock the Notifications