அன்னதானம் சாப்பிட்ட 17 பேருக்கு வாந்தி, மயக்கம்: திருச்செந்தூர் அருகே பரபரப்பு
அன்னதானம் சாப்பிட்டதால் 17 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகே கோயில் விழாவில் அன்னதானம் சாப்பிட்ட 17 பேர் மயக்கமடைந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள ஊர் அம்மன்புரம். இங்கு நடைபெற்ற கோவில் விழா ஒன்றில் பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை சாப்பிட்ட 17 பேர் திடீரென்று மயங்கி விழுந்தனர். இதனால் அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக திருச்செந்தூர் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த சில தினங்களாகவே ஒரு சில கோயில் திருவிழாக்களில் வழங்கப்படும் அன்னதானம், மற்றும் பிரசாதங்களை சாப்பிடுபவர்களுக்கு உடல்நலக்கேடு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவற்றினை கோயில்களின் அறங்காவலர்கள் குழுக்கள் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தர்களுக்கு வழங்குவதற்காக தயார் செய்ய பயன்படுத்தும் சமையல்பொருட்களின் தரம், காலாவதியாகும் நாட்கள் ஆகியவற்றை ஆய்வு செய்ய தமிழக அறநிலையத்துறை உத்தரவிட வேண்டும்.