ஆளுமைமிக்க தலைவரை நாம் இழந்துவிட்டோம்: திருமாவளவன் புகழாரம்
ஆளுமைமிக்க தலைவரை நாம் இழந்துவிட்டோம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவிற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
திருமாவளவனின் இரங்கல் செய்தி:
ஜெயலலிதாவின் மறைவு அதிமுக தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களுக்கே துயரமானது. 68 வயது என்பது இறக்கக் கூடிய ஒரு வயதல்ல. இரண்டரை மாதம் தீவிர சிகிச்சை அளித்தாலும் நம்மால் அவரை காப்பாற்ற முடியவில்லை என்பது கெடுவாய்ப்பான ஒன்று. அவரது மறைவு இந்திய அரசியலில் ஏற்பட்டுள்ள பெரிய வெற்றிடமாகும்.

எதற்கும், எவருக்கும் அஞ்சாத பெண்மணியாய் திகழ்ந்தவர் ஜெயலலிதா. போர்க் குணம் மிக்கவர்; அஞ்சாமை அயராமைதான் அவரது அடிப்படை குணம். சினிமா உலகில் இருந்து அரசியல் உலகிற்கு வந்து தலைவராக மக்கள் மனதில் நின்று வரலாறு படைத்துள்ளார்.
ஆளுமை நிறைந்த ஒரு தலைவரை நாம் இழந்துவிட்டோம் என்று திருமாவளவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications