“எம்.ஜி.ஆர். 100”.. 10 ஆண்டுகள் சிறையில் இருந்தவர்கள் விடுதலை.. முதல்வரை சந்தித்து திருமா மனு
எம்.ஜி.ஆர். நூற்றாண்டையொட்டி 10 ஆண்டுகளாக சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று திருமாவளவன் முதல்வரைச் சந்தித்து மனு அளித்துள்ளார்.
சென்னை: வரும் 17ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தொடங்க உள்ளது. இதனையொட்டி 10 ஆண்டுகள் சிறையில் உள்ளவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேரில் சந்தித்து மனு கொடுத்தார்.
தலைமை செயலகத்தில் முதல்வரை சந்தித்து மனு அளித்த பின்னர், திருமாவளவன் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீடு அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு கூடுதலாக இழப்பீடு வழங்க வேண்டும். மேலும், விவசாய தொழிலாளர்களுக்கு ஓர் ஆண்டில் 3 மாதங்களுக்கு ரூ. 3000 இழப்பீடு வழங்க வேண்டும். மீன் பிடி தடை காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படுவது போல ஆண்டு தோறும் விவசாயிகளுக்கும் வழங்க வேண்டும்.
ஜனவரி 17ம் தேதி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா தொடங்க உள்ளது. அவரது நூற்றாண்டையொட்டி 10 ஆண்டுகாலம் சிறையில் உள்ள அனைவருக்கும் விடுதலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை கொடுத்திருக்கிறோம்.
இதுகுறித்து, பரிசீலிப்பதாக முதல்வர் கூறியிருக்கிறார். அத்துடன் தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழங்களில் தலித் சமூகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருக்கிறோம் என்று திருமாவளவன கூறினார்.












Click it and Unblock the Notifications