மருத்துவக் கல்விக்கான நுழைவுத் தேர்வு: உச்சநீதிமன்ற தீர்ப்பு சமூகநீதிக்கு எதிரானது: திருமாவளவன்
சென்னை: அகில இந்திய பொது மருத்துவ கல்விக்கான நுழைவுத் தேர்வை நடத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து தீர்ப்பளித்துள்ளது சமூகநீதிக்கு எதிரானது என்று விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
அனைத்து மருத்துவக் கல்விக்கான தேசிய தகுதி நுழைவுத் தேர்வு நடத்திட உச்சநீதிமன்றம் நேற்று குறிப்பிட்ட கால அட்டவணைகளுடன் தீர்ப்பளித்துள்ளது. இது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.

2013 ஆம் ஆண்டு இதே உச்சநீதிமன்றம் இத்தேர்வுக்கு தடைவிதித்தது. அதனை எதிர்த்து இந்திய மருத்துவ கவுன்சிலின் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த ஐந்து நீதிபதிகளை கொண்ட அரசியலமைப்பு அமர்வு தடையை நீக்கி இந்த ஆண்டே தகுதி நுழைவுத் தேர்வை நடத்துமாறு காலவரையரைகளுடன் தீர்ப்பளித்துள்ளது.
கல்வி தரத்தை மேம்படுத்துவதற்காக இத்தகைய தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என சில கல்வியாளர்கள் இதனை வரவேற்கவும் செய்கின்றனர். ஆனால் இத்தீர்ப்பானது கிராமபுறத்து மாணவர்களையும் சமூக மற்றும் பொருளாதார அடிப்படையில் மிகவும் பின்தங்கியுள்ள குடும்பப் பின்னணிகளை கொண்ட மாணவர்களையும் வெகுவாக பாதிக்கும்.
இந்தியா முழுவதும் அனைவருக்கும் அடிப்படை கல்வியானது ஒரே தரமும் ஒரே பாடத்திட்டமும் கொண்டதாக வழங்கும் நிலையில்லை. அத்துடன் இந்தியா முழுவதும் மாணவர்கள் அனைவரும் ஒரே வகையான சமூக பொருளாதார பின்னணிகளை கொண்டவர்களாகவும் இல்லை.
மேலும் வாழிடமும் நகர்புறம், பெருநகரம், கிராமபுறங்கள் என்னும் பல்வேறு நிலைகளைக் கொண்டிருக்கிறது. இத்தகைய வேறுபாடுகளை கொண்டிருக்கும் நிலையில் அனைவருக்குமான பொதுவான தகுதி நுழைவுத் தேர்வை நடத்துவது என்பது சமூகநீதிக்கு எதிரானதாகும். எனவே இத்தீர்ப்பினை எதிர்த்து தமிழக அரசு உடனடியாக மேல்முறையீடு வழக்கு தொடுக்க வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
திமுக எம்.பி ஜெகத்ரட்சகன் சொத்து பறிமுதல் ரத்து.. அமலாக்கத்துறை வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி! -
விசிக வேட்பாளர்களுக்கு 3 தொகுதிகளில் வாக்களிக்க வேண்டாம்.. திருமாவளவனே சொன்ன வார்த்தை.. பின்னணி -
காட்டுமன்னார்கோவிலில் வாபஸ் பெற்றதற்கு திமுக அழுத்தம் காரணமா.. ஆதவ் புகாருக்கு திருமாவளவன் பதில் -
நான் காங்கிரஸ்காரன்! என்னை எப்படி திருமாவளவன்.. காட்டுமன்னார்கோவில் விசிக வேட்பாளர் ஜோதிமணி! -
திசைமாறிய திருமாவளவன்.. திடீரென தேர்தல் ‘ரிவர்ஸ்’ கியர்.. அப்செட்டான திமுக! இதான் ரியல் காரணம்? -
திருமாவளவனை மீறி.. ஆளூர் ஷாநவாஸ் திமுகவுடன் நெருக்கம்.. "ஒன்இந்தியாவிடம்" குமுறிய சங்கத்தமிழன்! -
“துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா?” போட்டியிட மறுத்ததற்கு காரணம் இதுதான்! திருமாவளவன் விளக்கம் -
தமிழக அரசியலுக்கு திருமாவளவன் திரும்பியது ஏன்? உளவுத்துறை எடுத்த நோட்ஸ்.. கசிந்த சீக்ரெட்? -
“நான் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவன்..” திருமாவளவன் அறிவித்த வேட்பாளர் பேச்சால் குழப்பம்! -
3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம்











Click it and Unblock the Notifications