விமான நிலையங்களை தனியார் மயமாக்கக் கூடாது - திருமாவளவன் கடிதம்
Subscribe to Oneindia Tamil

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அனுப்பியுள்ள கடிதம்:
மத்திய விமான போக்குவரத்து அமைச்சகத்தின் திட்டக்குழு சென்னை, கொல்கத்தா, ஜெய்பூர், அகமதாபாத் உள்ளிட்ட விமானநிலையங்களை பொதுத்துறை தனியார் கூட்டு வியாபாரம் மூலம் தனியாருக்கு ஏலம் விட்டு தனியார்மயமாக்க உள்ளதாக அறிகிறேன்.
இந்திய விமானத்துறை மிக அதிகபட்சமாக லாபம் ஈட்டி தருவதோடு, அரசின் வருமானத்தில் பெரும் பங்கு வகிக்கிறது. எனவே பொது நலன் கருதியும், விமான நிலைய பணியாளர்கள் சங்கத்தின் கோரிக்கை ஏற்றும் உடனடியாக தனியார் மயமாக்குதலை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த கடிதத்தில் திருமாவளவன் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications