திருப்பரங்குன்றத்தில் தபால் வாக்குகளில் முறைகேடு: திமுக புகாரை வாங்க மறுத்த தேர்தல் அதிகாரி
மதுரை: திருப்பரங்குன்றத்தில் தபால் வாக்குகளில் அதிமுக முறைகேடு செய்துள்ளதாக திமுக வேட்பாளர் அளித்த புகாரை வாங்க தேர்தல் அதிகாரி மறுத்துள்ளார்.
திருப்பரங்குன்றம் சட்டசபை தொகுதியில் கடந்த 19ம் தேதி இடைத்தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் ஏ.கே. போஸ் மற்றும் திமுக சார்பில் டாக்டர் சரவணன் ஆகியோர் போட்டியிட்டனர்.
தேர்தலில் பதிவான வாக்குகள் மதுரை அரசு மருத்துவக் கல்லூரியில் வைத்து இன்று எண்ணப்பட்டு வருகின்றது. வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு துவங்கியது.

முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. மொத்தம் பதிவான 48 தபால் வாக்குகளில் அதிமுகவுக்கு 44 கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து திமுக வேட்பாளர் சரவணன் தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தார்.
அவர் தனது புகாரில் கூறியிருப்பதாவது,
தேர்தல் அதிகாரி வீரராகவராவ் தபால் வாக்குகளில் 2 வாக்குகள் பதிவாகியுள்ளது என்றார். இன்று காலை முதலில் 34 வாக்குகள் பதிவானதாக கூறினார். சிறிது நேரத்தில் பெட்டி ஒன்றை கொண்டு வந்து 48 வாக்குகள் பதிவாகியுள்ளது என்றார்.
தபால் வாக்குகளில் பெரும்பாலானவற்றில் ஒரு குறிப்பிட்ட மையால் ஒரே மாதிரி டிக் செய்யப்பட்டுள்ளது. இதில் ஏதோ முறைகேடு நடந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
தேர்தல் அதிகாரி சரவணனின் புகாரை வாங்க மறுத்துவிட்டார் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
-
சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ஷாக் நியூஸ்! இனி இது இல்லைனா கேஸ் வராது.. மத்திய அரசின் தடை? -
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்?












Click it and Unblock the Notifications