போதை வேணுமாம்.. வாணியம்பாடி சிறையில் மதுபானம் குடித்த தலைமை காவலர்.. ஷாக் வீடியோ - சஸ்பெண்ட்
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி கிளை சிறையின் உள்ளே சட்டையை கழற்றிவைத்து விட்டு தலைமை காவலர் மதுபானம் அருந்திய வீடியோ வெளியாகி வேகமாக பரவி வரும் நிலையில் அவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் கிளை சிறை அமைந்துள்ளது. இங்கு தலைமை காவலராக ஜெயக்குமார் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு மதுபானம் குடிக்கும் பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தான் சிறையிலேயே அவர் தனது சீருடையை கழற்றிவைத்து விட்டு மதுபானம் அருந்தியதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான வீடியோ என்பது சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது. ஜெயக்குமாருக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இந்நிலையில் தான் சம்பவம் தொடர்பான சிறைத்துறை சார்பில் விசாரணை நடத்தப்பட்டது. இந்த விசாரணையை தொடர்ந்து தலைமை காவலர் ஜெயக்குமார் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை சிறைத்துறை கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான் பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications