அம்மா சாவுக்கு வராத நீங்க எங்களுக்கு தேவையில்லை.. திருப்பூர் எம்.எல்.ஏவுக்கு எதிராக பொங்கிய மக்கள்
திருப்பூர்: வளர்ப்புத் தாயின் இறுதிச் சடங்குகளில் கூட பங்கேற்காமல் கூவத்தூரில் கொட்டமடித்து அவப் பெயரைத் தேடிக் கொண்ட திருப்பூர் வடக்கு தொகுதி எம்எல்ஏ விஜயகுமாரை தொகுதிக்குள நுழையவிடாமல் பொதுமக்கள் சிறைபிடித்ததால் பதற்றம் நிலவியது.
தமிழகத்தில் ஏற்பட்ட அரசியல் மாற்றங்களின் போது தங்கள் கருத்துகளை கேட்காமல் சசிகலா தரப்பினருக்கு ஆதரவு தெரிவித்ததால் பொதுமக்கள் எம்எல்ஏ-க்கள் மீது ஆத்திரத்தில் உள்ளனர். இந்நிலையில் கடும் வறட்சி காரணமாக பொதுமக்கள் தண்ணீரின்றி அவதியடைந்தபோது தொகுதிக்குச் செல்லாமல் கூவத்தூரிலேயே இருந்தனர்.

தமிழகத்தில் எம்எல்ஏ-க்களின் விருப்பம் போல் ஆட்சி அமைந்ததால் தற்போது நிலைமை சீராகியதை அடுத்து தங்கள் சொந்த தொகுதிகளுக்கு செல்லும் எம்எல்ஏக்களுக்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். அவருக்கு எத்தனை செல்வாக்கு இருந்தாலும் அது குறித்து கவலைப்படாமல் சிறைபிடிப்பது, முற்றுகையிடுவது உள்ளிட்ட செயல்களில் மக்கள் ஈடுபடுகின்றனர்.
ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி திருப்பூரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்ள திருப்பூர் வந்த எம்.எல்.ஏ. விஜயகுமாரின் காரை மக்கள் சிறைப்பிடித்தனர். குடிக்க தண்ணீர் இன்றி தவித்தபோது கூவத்தூரில் இருந்த எம்.எல்.ஏ.,தங்களுக்கு தேவையில்லை என்றும் வளர்ப்புத் தாய் இறந்தபோதுகூட வராமல் கூவத்தூரில் தங்கியிருந்த எம்எல்ஏ உடனே ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மக்கள் கோஷங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து சசிகலா ஆதரவு அ.தி.மு.க.வினர் அங்கு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்த பெருமாநல்லூர் போலீஸார் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதனைத்தொடர்ந்து எம்.எல்.ஏ.வின் கார் விடுவிக்கப்பட்டது.
-
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட் -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
அதிமுக, தமிழக வெற்றிக் கழகம்.. மொத்தமாக கேம் ஓவர்.. அடித்து சொல்லும் 3 பெரிய கருத்து கணிப்புகள்!












Click it and Unblock the Notifications