திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு டாஸ்மாக் கடைகளுக்கு 16ம் தேதி லீவாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மாநிலத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும் என்று மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

இந்தாண்டு ஜனவரி 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. மறுநாள் ஜனவரி 16ம் தேதி மாட்டுப் பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் வருகிறது. வழக்கமாக திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு மதுக்கடைகள், பார்கள் இயங்காது.

Thiruvalluvar day: TASMAC liquor shops to be closed on Jan 16

இந்நிலையில் சென்னை கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருவள்ளுவர் தினத்தன்று எப்.எல்.2 உரிமம் கொண்ட கிளப்புகளை சார்ந்த பார்கள், எப்.எல்.3 உரிமம் கொண்ட ஹோட்டல்களை சார்ந்த பார்கள் மற்றும் எப்.எல்.3(ஏ) உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் மூடப்பட்டு இருக்க வேண்டும்.

அன்றைய தினம் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது. தவறினால், மதுபான விதிமுறைகளின்படி, சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதே போல பல்வேறு மாவட்ட நிர்வாகங்களும் அறிவிப்பு வெளியிட்டுள்ளன.

மேலும் 24ம் தேதி வள்ளலார் தினம், 26ம் தேதி குடியரசு தினத்தையொட்டி அந்த நாட்களிலும் டாஸ்மாக் கடைகள் இயங்காது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+