திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை - தொடர் மழையால் ஆட்சியர் உத்தரவு
திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளித்து மாவட்ட கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தீபாவளியை முன்னிட்டு 6 ஆம் தேதி சனிக்கிழமை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது; தீபாவளி முடிந்து 11 ஆம் தேதி பள்ளி திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கனமழை காரணமாக கடலுார், விழுப்புரம், நாகை, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் 11 ஆம் தேதி பள்ளிகளை திறக்க முடியவில்லை.

இந்நிலையில் திருவண்ணாமலையில் மாவட்டம் முழுவதும் இன்னும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து கலெக்டர் ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
எனினும், வேலூர் மாவட்டத்தில் இன்று முதல் பள்ளிகள் செயல்படத் துவங்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னையைப் பொறுத்த வரையில் வருகின்ற ஞாயிறு 22 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications