தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயில் அதிகமாக இருக்குமாம்.. வானிலை மையம் வார்னிங்!
தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video

சென்னை: தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவ மழைகள் போதுமான அளவு பெய்யாத நிலையில் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தற்போது வெயில் வாட்டி வதைக்கிறது.

இதன் காரணமாக பல இடங்களில் தற்போதே தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு மக்கள் குடத்துடன் அலையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் வழக்கத்தைவிட இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். ஆந்திராவில் வீசும் வெப்பக்காற்றை பொறுத்து தமிழகத்தில் வெயிலின் தாக்கம் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்திய அளவில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 90% அளவுக்கு மழை இருக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
வானிலை தொடர்பான மேலும் விவரங்களுக்கு












Click it and Unblock the Notifications