பணத்திற்காக கடத்தப்பட்ட தி.மு.க. பிரமுகர் மீட்பு; அட்டாக் பாண்டிக்காக கடத்தியதாக வாக்குமூலம்!

ராமேஸ்வரம் முத்துராமலிங்க தேவர் நகரை சேர்ந்தவர் வில்லாயுதம். இவர் நகர தி.மு.க. துணைச் செயலாளராக உள்ளார். இன்று காலை வில்லாயுதம் ஏற்கோடு பகுதியில் நடை பயிற்சி மேற்கொண்டிருந்திருந்த போது ஆம்னி வேனில் வந்த சில மர்ம நபர்கள் அவரை கடத்தி சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தை நேரில் பார்த்த அப்பகுதியை சேர்ந்தவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள். இதையடுத்து, ராமேஸ்வரம், மண்டபம் மற்றும் உச்சிப்புளி பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, உச்சிப்புளி அருகே வில்லாயுதத்தை கடத்தி சென்ற காரை போலீசார் மடக்கியுள்ளனர். போலீசாரை கண்டதும் காரின் டிரைவர் கார்த்தி தப்பி ஓடி இருக்கிறார்.
காரில் இருந்த ராஜா என்ற ராஜமுருகன் மற்றும் மதுரையை சேர்ந்த வழிவிட்டான், முத்துமாரி ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். இதில், ராஜமுருகன் பொட்டு சுரேஷ் கொலை வழக்கில் தொடர்புடையவர் என்று கூறப்படுகிறது.
கடத்தப்பட்ட வில்லாயுதத்திற்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதால், தற்போது அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மூவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், கமுதி அருகே உள்ள பெருநாழியை சேர்ந்த முருகபாண்டியன் என்பவர்தான், அட்டாக் பாண்டிக்காக 10 லட்சம் ரூபாய் கேட்டு வில்லாயுதத்தை கடத்த சொல்லி இருப்பது தெரிய வந்திருக்கிறது. இதை தொடர்ந்து முருகபாண்டியை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும், இது தொடர்பாக ராமேஸ்வரம் கோவில் காவல் நிலைய போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications