முன்விரோதத்தால் தென்காசி ஒப்பந்தக்காரர் கொலை... கேரளாவில் 3 பேர் கைது

Subscribe to Oneindia Tamil

செங்கோட்டை: முன்விரோதம் காரணமாக தென்காசி ஒப்பந்தக்காரர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கேரளாவில் தேடப்பட்டு வந்த 3 பேரை கேரளாவில் கைது செய்துள்ளனர்.

கேரளமாநிலம் தென்மலை அருகேயுள்ளது எடமன். இந்த ஊரில் செங்கோட்டை -புனலூர் அகல ரயில் பாதை க்கான பணிகள் நடைப்பெற்று வருகிறது.இந்த பணிகளுக்காக தென்காசியை சார்ந்த இசக்கிமுத்து என்பவர் தொழிலாளர்களை அழைத்து வரும் ஒப்பந்த பணிகளை செய்து வருகிறார்.

Three arrested in Tenkasi contractor murder case

இந்நிலையில் இவருக்கும் நெல்லையை சார்ந்த மாரியப்பன் என்பவருக்கும் தொழிலாளர்களை வேலைக்கு அழைத்து செல்வதில் முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2ஆம் தேதி இசக்கிமுத்துவைக் காணவில்லை.

மறுநாள் எடமன் தொலைபேசி அலுவலகம் அருகில் ரத்த காயத்தோடு இசக்கிமுத்து பிணமாக மீட்கப்பட்டார். இது குறித்து தென்மலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் நெல்லையை சார்ந்த மாரியப்பன், சாம்பவர் வடகரையை சார்ந்த கணேசன், கல்லிடைக்குறிச்சியை சார்ந்த ஈத்தான் ஆகிய 3பேரும் சேர்ந்து இசக்கிமுத்துவை பாட்டிலால் தலையில் அடித்து கொலை செய்து தொலைபேசி அலுவலக மாடியில் போட்டு சென்றது தெரியவந்தது.

அதனைத்தொடர்ந்து தென்மலை போலீசார் தனிப்படை அமைத்து தலைமறைவாக இருந்த 3பேரையும் தேடி வந்தனர். இந்நிலையில் இன்று அவர்கள் மூன்று பேரும் தென்மலை அருகே கைது செய்யப் பட்டனர். பின்னர் குளத்துப் புழா காவல் நிலையத்திற்கு அவர்களை அழைத்துச் சென்று போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள் முன் விரோதம் காரணமாக இசக்கிமுத்துவைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களை கைது செய்து புனலூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+