For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னை அருகே கிணற்றின் கான்கிரிட் மூடி சரிந்து விபத்து.. 3 பேர் பலி.. தண்ணீர் எடுத்தபோது பரிதாபம்!

சென்னை அருகே கல்பாக்கத்தில் கிணற்றில் தண்ணீர் இறைத்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

Google Oneindia Tamil News

சென்னை: கல்பாக்கத்தில் கிணற்றில் தண்ணீர் இறைத்தபோது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

சென்னை கல்பாக்கத்தை அடுத்த அணைக்கட்டு செம்பூரில் ஊருக்கு ஒதுக்குப்புறமாக கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணறு கான்கிரீட் மூடி போட்டு மூடப்பட்டுள்ளது.

Three dead in Kalpakkam near in Chennai while taking water from well

இந்நிலையில் அணைக்கட்டு செம்பூரில் நேற்று மின்தடை ஏற்பட்டது. இதனால் நேற்று அங்குள்ள நீரேற்று தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படவில்லை.

Three dead in Kalpakkam near in Chennai while taking water from well

இதனால் அப்பகுதி மக்கள் இன்று கிணற்றில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக கான்கிரீட் மூடி இடிந்து விழுந்தது.

Three dead in Kalpakkam near in Chennai while taking water from well

இதில் தண்ணீர் எடுத்துக்கொண்டிருந்த 8 பேர் கிணற்றில் விழுந்தனர். இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.

Three dead in Kalpakkam near in Chennai while taking water from well

மேலும் கிணற்றில் விழுந்த 5 பேரை உயிருடன் மீட்ட தீயணைப்புத்துறையினர் அவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். கிணற்றில் தண்ணீர் இறைத்த போது ஏற்பட்ட விபத்தில் 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

English summary
Three dead in Kalpakkam near in Chennai while taking water from well. 5 rescused and has been admitted in the hospital.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X