மோடி கூட்டத்தில் பரபரப்பு.. மேடை சரிந்து விழுந்து 3 பேர் காயம்
லக்னோ: உ.பி. மாநிலம் சிக்கந்தர்பூர் என்ற இடத்தில் பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி பேசிய மேடையில் கிராமப்புற பாடகர்கள் பாட்டுப் பாடி கச்சேரி நடத்தியபோது திடீரென மேடை சரிந்து விழுந்தது. இதில் 3 பேர் காயமடைந்தனர்.
மோடியின் கூட்டத்திற்காக போடப்பட்டிருந்த மேடையில் மோடி வருகைக்கு முன்பு கச்சேரி நடந்தது. அதில் கிராமப்புற பாடகர்கள் சிலர் பாட்டுப் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது மோடி அங்கு வந்தார்.
அவர் மேடையெ நெருங்கிய சமயத்தில் திடீரென மேடை பாரம் தாங்காமல் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இதில் 2 இளைஞர்களும், ஒரு 13 வயது சிறுமியும் சிக்கிக் கொண்டு காயமடைந்தனர். அவர்களை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். காயமடைந்த சிறுமி லட்சுமியின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மேடை அமைப்பாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட எஸ்.பி. கோஸ்வாமி தெரிவித்தார்.