ஓடும் ரயிலில் மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ரயில்வே ஊழியர்கள்: தட்டி கேட்ட மாணவருக்கு அடி, உதை
திருவாரூர்: ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிகளிடம் சில்மிஷம் செய்த ரயில்வே ஊழியர்களை தட்டி கேட்ட மாணவன் தாக்கப்பட்டு மருத்துமவனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வேலியே பயிரை மேய்ந்தது போல இந்த சம்பவம் திருவாரூர் அருகே நடந்துள்ளது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஆதனூரைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சுரேஷ் (17). இவர் நாகை மாவட்டத்திலுள்ள ஒரு தனியார் கல்லூரியில் கடற்சார்ந்த பொறியியல் 3ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று மாலை கல்லூரியை முடித்துவிட்டு நாகப்பட்டிணத்திலிருந்து காரைக்கால்-எர்ணாகுளம் விரைவு ரயிலில் நீடாமங்கலத்துக்கு சகமாணவிகள் சிலருடன் பயணம் செய்து கொண்டிருந்தார்.
சுரேஷ் பயணம் செய்த அதே ரயில் பெட்டியில் பயணம் செய்த திருவாரூர் ரயில் நிலைய அலுவலரும், அம்மாபேட்டையைச் சேர்ந்தவருமான அருண்ராஜ் (26), தஞ்சாவூர் ரயில்வே காலனியைச் சேர்ந்தவரும், பண்டாரவாடையில் ரயில்வே கேட் கீப்பராக பணியாற்றுபவருமான பிரபாகரன் (26), மாரியம்மன்கோயில் தெருவைச் சேர்ந்தவரும், பண்டாரவாடையில் பாய்ண்ட் மேனாக பணியாற்றுபவருமான பிரபு (30) ஆகியோர் மாணவிகளிடன் சில்மிஷம் செய்துள்ளனர்.
இதை பார்த்த சுரேஷ், தட்டிக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த ரயில்வே ஊழியர்கள் மூவரும் சுரேஷை அடித்து உதைத்துள்ளனர். தாக்குதலால் காயமடைந்த சுரேஷ் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து திருவாரூர் ரயில் நிலைய சார்பு இன்ஸ்பெக்டர் ப. செந்தாமரை வழக்குப்பதிவு செய்து ரகளை செய்த மூவரையும் கைது செய்து விசாரித்து வருகிறார். வேலியே பயிரை மேய்வதைப்போல, ரயில்வே ஊழியர்களே ரயில் பயணிகளிடம் சில்மிஷம் செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
வடிவேலுவை சினிமாவில் நுழைய விட்டதும், வளர்த்து விட்டதும் தப்பு.. ப்ளூ சட்டை மாறன் காட்டம்! பின்னணி சம்பவம் -
தவெக 6-12 தொகுதிகள் ஜெயிக்க வாய்ப்பு.. விஜய் வருகையால் அதிமுகவுக்கு பூஸ்ட்? கருத்துக்கணிப்பு ரிசல்ட் -
ஜோதிடரிடம் இருந்து வந்த மெசேஜ்.. வியூகத்தை மாற்றும் எடப்பாடி பழனிசாமி -
கிங் மேக்கர்? செக் வைத்த ’விஜய்’.. திணறும் அறிவாலயம்! - மட்ரைஸ் சர்வே சொல்லும் ‘திடுக்’ ரிப்போர்ட்! -
தங்க மழை கொட்ட போகுது.. PF வச்சு இருக்கீங்களா? சம்பள உச்சவரம்பு ₹25,000 ஆக உயருது? மாஸ் பிளான் -
தயாநிதி மாறன் கணித்த திமுகவின் 200+ ஸ்வைப்.. அப்ப வாஷ் அவுட் ஆகிவிடுமா எடப்பாடி பழனிசாமியின் அதிமுக? -
PMK Ramadoss: பாமக ராமதாஸை தைலாபுரத்தில் சந்தித்தாரா செங்கோட்டையன்? நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications