கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுக்கு பன்றிக் காய்ச்சல்
Subscribe to Oneindia Tamil
கோயம்புத்தூர்: கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்களுக்கு பன்றிக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஆந்திரா, தெலுங்கானாவைத் தாக்கிய பன்றிக் காய்ச்சல் பிற மாநிலங்களுக்கும் பரவி வருகிறது. சென்னையில் பன்றிக் காய்ச்சல் பாதிக்கப்பட்டு 2 பேர் பலியாகி இருந்தனர்.

இந்நிலையில் கோவையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சந்திரிகா (80), ராதா (65), சசிகலா (57) ஆகிய மூவருக்கும் பன்றிக் காய்ச்சல் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மூவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே இவர்களது உறவினர் ஒருவர் கடந்த 31-ந் தேதியன்று பன்றிக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். தற்போது அவரது உறவினர்கள் 3 பேருக்கும் நோய் தொற்றியுள்ளது.












Click it and Unblock the Notifications