நல்ல தமிழுக்குச் சொந்தக்காரரான தமிழருவி மணியன் இப்படிச் செய்யலாமா.. திருமா சாடல்
சென்னை: காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஊழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பின் தங்கியுள்ளது. பாஜக குஜராத் முதல்வர் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேசிய அளவில் கூட்டணியை பலப்படுத்தி வருகிறது.
தமிழகத்தில் பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் வெளிப்படையாகவே செயலாற்றி வருகின்றனர். அவரது முயற்சியில் பாஜக கூட்டணியில் மதிமுக இணைந்துவிட்டது. அடுத்து தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தான் பேசும் மேடைகளில் எல்லாம் தமிழருவி மணியனை வறுத்தெடுத்து வருகின்றாராம்.
நல்ல தமிழுக்கு சொந்தக்காரரான தமிழருவி மணியன் பாஜக அலுவலகம் வரை செய்தியாளர்களை சந்திக்கும் அளவு இந்த நாட்டில் என்ன அதிசயம் நடந்துவிட்டது. தமிழருவி மணியனுக்கோ அல்லது இந்த நாட்டிற்கோ பாஜக என்ன நல்லது செய்துவிட்டது. எதுவும் இல்லை. காந்தி முகமூடியை அணிந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ்-க்கும், பாஜகவுக்கும் தமிழருவி மணியன் பிரச்சாரம் செய்வதன் மூலம் அவர் முகமூடி கிழிந்துவிட்டது என வறுத்தெடுத்து வருகின்றாராம் திருமா.