நல்ல தமிழுக்குச் சொந்தக்காரரான தமிழருவி மணியன் இப்படிச் செய்யலாமா.. திருமா சாடல்
சென்னை: காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் மீது கடும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்றார் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி.
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஊழல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பின் தங்கியுள்ளது. பாஜக குஜராத் முதல்வர் மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்து தேசிய அளவில் கூட்டணியை பலப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில் பாஜக கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் வெளிப்படையாகவே செயலாற்றி வருகின்றனர். அவரது முயற்சியில் பாஜக கூட்டணியில் மதிமுக இணைந்துவிட்டது. அடுத்து தேமுதிகவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது.
இந்த நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் தான் பேசும் மேடைகளில் எல்லாம் தமிழருவி மணியனை வறுத்தெடுத்து வருகின்றாராம்.
நல்ல தமிழுக்கு சொந்தக்காரரான தமிழருவி மணியன் பாஜக அலுவலகம் வரை செய்தியாளர்களை சந்திக்கும் அளவு இந்த நாட்டில் என்ன அதிசயம் நடந்துவிட்டது. தமிழருவி மணியனுக்கோ அல்லது இந்த நாட்டிற்கோ பாஜக என்ன நல்லது செய்துவிட்டது. எதுவும் இல்லை. காந்தி முகமூடியை அணிந்து கொண்டு ஆர்.எஸ்.எஸ்-க்கும், பாஜகவுக்கும் தமிழருவி மணியன் பிரச்சாரம் செய்வதன் மூலம் அவர் முகமூடி கிழிந்துவிட்டது என வறுத்தெடுத்து வருகின்றாராம் திருமா.
-
“துணை முதல்வர் பதவிக்கு ஆசைப்படுகிறேனா?” போட்டியிட மறுத்ததற்கு காரணம் இதுதான்! திருமாவளவன் விளக்கம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
விசிக திருமாவளவன் களமிறங்கும் காட்டுமன்னார்கோவில்! 8 வேட்பாளர்களும் இன்றே வேட்புமனுத் தாக்கல்? -
தமிழக அரசியலுக்கு திருமாவளவன் திரும்பியது ஏன்? உளவுத்துறை எடுத்த நோட்ஸ்.. கசிந்த சீக்ரெட்? -
திருமாவளவனை மீறி.. ஆளூர் ஷாநவாஸ் திமுகவுடன் நெருக்கம்.. "ஒன்இந்தியாவிடம்" குமுறிய சங்கத்தமிழன்! -
3 எம்பிக்கள் தமிழக சட்டசபை தேர்தலில் போட்டி.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்ட் இதோ.. பின்னணி -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
உதயநிதி மகனின் சொத்து, விஜய் மகனுக்கு தந்த கடன்.. கார்த்தி சிதம்பரம் சொன்ன முக்கியமான பாயிண்ட்












Click it and Unblock the Notifications