சிவகாசி அருகே இடி தாக்கி பட்டாசு ஆலை தரைமட்டம்.. பெண் தொழிலாளி பலி!
இடிதாக்கியதில் பட்டாசு ஆலை இடிந்து விழுந்து தொழிலாளி உயிரிழந்தார்.
Subscribe to Oneindia Tamil
சிவகாசி: சிவகாசி அருகே இடி தாக்கியதில் தரைமட்டமான பட்டாசு ஆலை விபத்தில் பெண் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள பகுதி விஸ்வநாத்தம். இங்கு பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று இப்பகுதியில் இடி, மின்னலுடன் கூடிய கனத்த மழை பெய்தது.

இதில் பலமான இடி ஒன்று பட்டாசு ஆலையினை தாக்கியது. இதனால் பட்டாசு ஆலை தரைமட்டமானது. இந்த இடிபாடுகளில் ஆலையில் பணிபுரிந்துகொண்டிருந்த பார்வதி என்ற தொழிலாளி சிக்கி உயிரிழந்தார்.
இதையடுத்து மீட்பு படை, தீயணைப்புத்துறை, மற்றும் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது, விரைந்து வந்த மீட்பு பணியினர் இடிபாடுகளை அகற்றும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications