தமிழக எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளுடனான தொடர்பு அதிகரித்துவிட்டது.. அள்ளிவிடும் தமிழிசை
தமிழக எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளுடனான தொடர்பு அதிகரித்து விட்டதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சி: தமிழக எல்லைப் பகுதியில் தீவிரவாதிகளுடனான தொடர்பு அதிகரித்து விட்டதாக மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க விதிக்கப்பட்ட தடை உத்தரவை தமிழக அரசியலில் ஏற்றுகொள்வது கடினம் என்று அவர் கூறினார்.
மேலும் தமிழக எல்லைப்பகுதியில் தீவிரவாதிகளுடனான தொடர்பு அதிகரித்துவிட்டது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டினார். இதனை தமிழக அரசு கண்காணிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
கந்துவட்டி தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த தமிழிசை கந்துவட்டி பிரச்சனையை தமிழக அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது என்றார்.
மேலும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாப் போலவே அனைத்து பிரச்சனைகளிலும் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார்.