நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை : மாஃபா பாண்டியராஜன் அதிரடி!
நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் ஒபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை: நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என ஓபிஎஸ் ஆதரவாளரும் முன்னாள் அமைச்சருமான மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். நிபந்தனைகள் என்வென்று கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
அதிமுகவின் இரு அணிகளும் இணைவது குறித்து பேச்சுவார்த்தை நடத்த இரண்டு அணிகளும் தலா 7 பேர் கொண்ட குழுவை நியமித்துள்ளன. இந்த அணிகள் ஆனால் ஓபிஎஸ் அணிகள் சில நிபந்தனைகளை விதிதுள்ளது.
இதனை ஏற்க எடப்பாடி தரப்பு மறுத்து வருவதாக கூறப்படுகிறது. அதற்கேற்றார் போல் எடப்பாடி தரப்பை சேர்ந்த அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் முரணாக பேசி வருகின்றனர்.
இருப்பினும் நேற்றே பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று பேச்சு வார்த்தை நடைபெறவில்லை. டிடிவி தினகரன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பேச்சுவார்த்தைக்கு உகந்த சூழல் ஏற்பட்டுள்ளதாக இரு அணிகளும் கூறி வந்தன.
ஈபிஎஸ் தரப்பின் அமைச்சர்கள் ஜெயக்குமார் மற்றும் சிவி சண்முகம் ஆகியோர் தாங்கள் பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாக தெரிவித்தனர். இந்நிலையில் சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் அணியின் மாஃபா பாண்டியராஜன், நிபந்தனைகளை ஏற்றால் மட்டமே பேச்சுவார்த்தை என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.