திண்டிவனம் அருகே மரத்தில் கார் மோதி விபத்து- 3 பெண்கள் உட்பட 4 பேர் பலி
விழுப்புரம்: திண்டிவனம் அருகே மரத்தில் கார் மோதிய விபத்தில் மூன்று பெண்கள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே திருச்சியை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் அருகில் இருந்த மரத்தில் மோதி கார் விபத்தில் சிக்கியது.
இதில், காரில் பயணம் செய்த 3 பெண்கள் உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். விபத்தில் உயிரிழந்த 4 பேரும் திருச்சியை சேர்ந்தவர்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
பயணிகள் கூட்டத்தில் லாரி புகுந்தது:
இதேபோல், கடலூர் அருகே பேருந்துக்காக காத்திருந்த பயணிகள் கூட்டத்தில் பெரியகாரைப்பட்டியில் இருந்து வந்த லாரி புகுந்தது. இதில் பெரியகாரைக்கோட்டைச் சேர்ந்த பரமேஸ்வரன் என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். மேலும் விபத்தில் காயமடைந்த 4 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் இரண்டு பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Click it and Unblock the Notifications