எச். ராஜா பகிரங்கமாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் – தொல். திருமாவளவன்
சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குறித்த கருத்திற்காக எச்.ராஜா வெளிப்படையாக வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களுக்கு எதிராக சவால் விடும் வகையில் பேசியிருக்கின்றார் எச்.ராஜா.

ஆளும் கட்சியினைச் சேர்ந்த ஒருவரான ராஜா, அரசியல் தலைவர் ஒருவரைப் பற்றி நாவடக்கமின்றி பேசியிருப்பது தவறான முன்னுதாரணம். ராஜா அவர்களின் போக்கை விடுதலைச் சிறுத்தைகள் மிக வன்மையாக கண்டிக்கிறது.
அவர் தனது பொறுப்பற்ற பேச்சுக்காக வெளிப்படையாக வருத்தம் தெரிவிப்பதுதான் அவருடைய பதவிக்கு அவர் மதிப்பளிப்பதாக இருக்குமென்று விடுதலைச் சிறுத்தைகள் சுட்டிக்காட்ட விரும்புகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications