திருப்பூரில் தனியார் பள்ளிப் பேருந்து கவிழ்ந்து விபத்து - 40 குழந்தைகள் காயம்
திருப்பூர்: திருப்பூரில் தனியார் பள்ளிப் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 40 குழந்தைகள் காயமடைந்தனர்.
திருப்பூர் காங்கேயம் சாலையில் இயங்கிவருகிறது பிரபல தனியார் பள்ளி ஒன்று. இப்பள்ளிக்கு பள்ளிப் பேருந்து மூலம் சுற்றுப்பகுதியில் இருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் கல்வி கற்று வருகின்றனர்.

அந்தவகையில், வழக்கம்போல் பள்ளி மாணவர்களை ஏற்றி வந்த அப்பள்ளியின் பேருந்து ஒன்று, திடீரென கவிழ்ந்து விபத்தில் சிக்கியது. இதில், அப்பேருந்தில் பயணம் செய்த 40 குழந்தைகள் காயமடைந்தனர்.
அருகில் இருந்தவர்கள் விரைந்து செயல்பட்டு, காயமடைந்த குழந்தைகளை காப்பாற்றி அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
விபத்து குறித்து தகவல் அறிந்து அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மருத்துவமனையில் குவிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications