3 ஆவது மனைவி மகளுடன் “பைட்” - 2 ஆவது மனைவியின் மகனைக் கொன்ற தந்தை!
திருப்பூர்: திருப்பூரில் 3 ஆவது மனைவியின் மகளிடம் சண்டை போட்ட 2 ஆவது மனைவியின் மகனை கொலை செய்த தந்தை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசி அருகிலுள்ள கருமாபாளையம், மூலக்காதடுத் தோட்டத்தை சேர்ந்தவர் சுப்ரமணி. இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். இதில் 2 ஆவது மனைவியின் மகன் கிருஷ்ணமூர்த்தி. இவர் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.
கடந்த 22 ஆம் தேதி இரவு, இவரது வீட்டுக்கு அருகே உள்ள தோட்டத்து சாலையில் உள்ள ஓலை கொட்டகையில் தூங்கச் சென்றவர் காலையில், பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து, கிருஷ்ணமூர்த்தி குடும்பத்தினர் சேவூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சுப்பரமணியிடமும் அவரது மூன்று மனைவிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் சுப்பிரமணியம் சேவூர் கிராம நிர்வாக அலுவலர் சிவாஜியிடம் நேற்று சரணடைந்தார். பின், சேவூர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார்.
போலீசாரிடம் சுப்பிரமணியம் கொடுத்துள்ள வாக்கு மூலத்தில், எனது 2 ஆவது மனைவியின் மகன் கிருஷ்ணமூர்த்தி, கடந்த 22 ஆம் தேதி வஞ்சிபாளையம் சென்றபோது சுப்ரமணியின் மூன்றாவது மனைவியின் மகள் கார்த்திகாவிடம் சண்டையிட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த சுப்ரமணி மகன் கிருஷ்ணமூர்த்தியிடம் தட்டிக்கேட்டதால், தந்தை-மகன் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தெரிவித்த சுப்ரமணி, "கிருஷ்ணமூர்த்தி தோட்டத்துக்கு சாலைக்கு தூங்கச் சென்றுள்ளார். நள்ளிரவு 1.30 மணிக்கு அங்கு சென்ற நான் தூங்கிக் கொண்டிருந்த எனது மகனை மண்வெட்டியால் தலையில் பலமாக அடித்தேன். மண்டை உடைந்த அடுத்த சில நிமிடங்களில் கிருஷ்ணமூர்த்தி இறந்துவிட்டான்" என்று வாக்குமூலத்தில் கூறியுள்ளார். சுப்ரமணியை கைது செய்த போலீசார் அவரை கோவை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications