செல்ஃபி எடுக்கப் போய் நாகப் பாம்பிடம் சிக்கி மாண்ட சந்திரகுமார்.. 8 மாதத்தில் விதவையான செல்வி!
திருப்பூர்: குடிபோதையில் நாகப்பாம்புடன் செல்ஃபி எடுக்க முயற்சித்த போது, பாம்பு கடித்ததில் புது மாப்பிள்ளை ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள டி.காளிபாளையம் காந்தி நகரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி சந்திரகுமார் (27). கடந்த 8 மாதங்களுக்கு முன்னர் இவருக்கு திருமணம் நடைபெற்றது. வழக்கம் போல, பணிக்கு சென்று திரும்பிய சந்திரகுமார், இரவில் மது குடித்து விட்டு காற்றுக்காக வீட்டுத் திண்ணையில் படுத்து உறங்கியுள்ளார்.
நள்ளிரவில் தனது உடலில் ஏதோ ஊர்வதை உணர்ந்த சந்திரகுமார், திடுக்கிட்டு விழித்துப் பார்த்துள்ளார். அப்போது அவர் மீது நாகப்பாம்பு ஒரு படமெடுத்தபடி நின்றுள்ளது.

போதையில் இருந்த சந்திரகுமார், பாம்பைக் கண்டு அதிர்ச்சி அடையாமல் அதனைத் தனது கையால் பிடித்தபடி செல்ஃபி எடுத்துள்ளார். பின்னர் அதனை, ‘எனது வீர தீர செயலைப் பாருங்கள்' என்ற வாசகத்துடன் நண்பர்களுக்கு வாட்ஸ் அப்பில் அனுப்பியுள்ளார்.
இதற்கிடையே சந்திரகுமாரின் கையில் இருந்த பாம்பு அவரைக் கடித்து விட்டது. இதனால், உடல் முழுவதும் விஷம் பரவ, வாயில் நுரை தள்ளிய நிலையில் சந்திரகுமார் மயங்கினார்.
அதிகாலையில், வீட்டை விட்டு வெளியே வந்த செல்வி, தனது கணவர் வாயில் நுரை தள்ளிய நிலையில் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். செல்வியின் அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம் பக்கத்தா, சந்திரகுமாரை தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காகத் தூக்கிச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சைப் பலனின்றி சந்திரகுமார் பரிதாபமாக உயிரிழந்தார்.
உலகையே ஆட்டிப் படைத்து வரும் செல்ஃபி மோகம், தற்போது தாராபுரத்தில் ஒரு புதுமாப்பிள்ளையின் உயிரையே பறித்திருப்பது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
-
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள்












Click it and Unblock the Notifications