புத்தாண்டில் குடித்துக் குவித்த குடிகாரர்களால்... ரூ.164 கோடி மது விற்பனை!
சென்னை: ஆங்கிலப் புத்தாண்டையொட்டி தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகளில் மிகப் பெரிய அளவில் விற்பனை நடந்துள்ளதாம். இதுவரை இல்லாத அளவுக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளன.
அதாவது டிசம்பர் 30 மற்றும் 31 ஆகிய இரு தேதிகளில் மட்டும் ரூ. 164 கோடி அளவுக்கு தமிழக மதுக் கடைகளில் மது விற்பனையாகியுள்ளது.
இது கடந்த ஆண்டைவிட 22 கோடி அதிகம் ஆகும்..

6800 கடைகள்
தமிழக்த்தில் மொத்தம் 6,800 க்கு மேற்பட்ட மதுபான கடைகளும், 21 எலைட் கடைகளும் உள்ளன.

வழக்கமான நாட்களில்
மதுபான கடைகளில் வழக்கமான நாட்களில் சராசரியாக நாள் ஒன்றுக்கு 50 கோடிக்கும், சனி மற்றும் ஞாயிறு கிழமை உள்ளிட்ட இதர விடுமுறை நாட்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக ரூபாய் 80 கோடிக்கும் மேல் விற்பனை நடைபெறும்.

பண்டிகை நாட்களில் அமோகம்
தமிழகத்தில் பண்டிகை நாட்களில் மது பிரியர்கள் ஒட்டுமொத்தமாக டாஸ்மாக் கடைகளை நோக்கி படை எடுப்பதால் ஆண்டுக்கு ஆண்டு மது விற்பனை அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது.

போட்டி போட்டு சரக்கு விற்ற மாவட்டங்கள்
இந்த வருடம் ஆங்கிலப் புத்தாண்டு மது விற்பனையில், தமிழ் நாட்டில் உள்ள 32 மாவட்டகளிலிலும் செம போட்டி ஏற்பட்டதாம்.

முதலிடத்தைப் பிடித்தி திருப்பூர்
ஆங்கிலப் புத்தாண்டு விற்பனையில் திருப்பூர் மாவட்டம் முதல் இடத்தை தட்டிச் சென்றது.

2வது இடத்தில் காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாவட்டம் 2 வது இடத்தை பெற்றுள்ளது. சென்னைக்கு 3வது இடம் கிடைத்துள்ளது.

முதலிடத்தை இழந்தது சென்னை
கடந்த ஆண்டு சென்னை மாவட்டம் முதல் இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
என்னத்தச் சொல்ல!












Click it and Unblock the Notifications