Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழக சட்டசபை 22ம் தேதி கூடுகிறது?: 2016 - 17 பட்ஜெட் தாக்கலாக வாய்ப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளதாக தலைமைச் செயலக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 22ம்தேதி (வெள்ளிக்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டசபை கூடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி சட்டசபை செயலாளரிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

முதல்வர் ஜெயலலிதா 6வது முறையாக ஆட்சிப்பொறுப்பை ஏற்ற பிறகு கடந்த மே மாதம் 25ந்தேதி முதல் சட்டசபை கூட்டம் நடைபெற்றது. அன்று எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்றுக் கொண்டனர்.

TN assembly budget session to meet on July 22?

ஜூன் 3ம்தேதி சபாநாயகர், துணை சபாநாயகரை தேர்ந்தெடுக்க சட்டசபை கூடியது. ஜூன் 16ம்தேதி ஆளுநர் உரையுடன் 15வது சட்டசபையில் முதல் கூட்டத் தொடர் நிகழ்த்தினார். அதன்பிறகு சட்டசபை 4 நாட்கள் நடைபெற்றது.

இதில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசினார்கள். காரசார விவாதங்களுடன் நடைபெற்ற இந்த கூட்டத்தில் முதல்வ ஜெயலலிதா விரிவாக பதில் அளித்து பேசினார். அதன் பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த வாரம் முதல்வர் ஜெயலலிதா தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜூலை 22ம்தேதி (வெள்ளிக்கிழமை) பட்ஜெட் தாக்கல் செய்ய சட்டசபை கூடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றி சட்டசபை செயலாளரிடம் இருந்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்த கூட்டத் தொடரில் பட்ஜெட் மீது விவாதம், துறைவாரியாக மானிய கோரிக்கைகள் மீது நடைபெறும் விவாதங்களுக்கு அமைச்சர்களின் பதிலுரை, புதிய சட்ட திருத்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்படும்.

சென்னையில் நடைபெற்று வரும், கொலை, கொள்ளை, செயின் பறிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள், மீனவர் பிரச்சினை, பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு கட்டி வரும் தடுப்பணை பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு வி‌ஷயங்கள் குறித்தும் சட்ட சபையில் எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

படிப்படியாக தமிழ் நாட்டில் மது விலக்கை கொண்டு வரும் வகையில் ஏற்கனவே 500 மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளன. 2வது கட்டமாக 500 அல்லது 1000 மதுக்கடைகளை மூடுவதற்கு அதிகாரிகள் ஆய்வு செய்து கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர். இதில் எத்தனை மதுக்கடைகள் 2வது கட்டமாக மூடப்படும் என்ற அறிவிப்பை முதல்வர் ஜெயலலிதா இந்த சட்டசபை கூட்டத் தொடரின் போது அறிவிக்க வாய்ப்பு உள்ளது.

இலவச செல்போன், மானிய விலை இருசக்கர வாகனம் ஆகிய முக்கிய அறிவிப்புகளும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+