தமிழக சட்டசபை கூடியது- கட்டிட விபத்துகளில் உயிரிழந்தோருக்கு இரங்கல்!
சென்னை: தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. இக்கூட்டத்தின் தொடக்கத்தில் மவுலிவாக்கம், திருவள்ளூர் கட்டிட விபத்துகளில் உயிரிழந்தோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
தமிழக சட்டசபை இன்று காலை கூடியது. சபைக்கு வந்த முதல்வர் ஜெயலலிதாவை சபாநாயகர் தனபால், அமைச்சர்கள் மற்றும் சட்டசபை செயலர் ஜமாலுதீன் ஆகியோர் வரவேற்றனர்..

இன்று காலை சபை கூடியதும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் கோ.பூவராகன், அ.மலர்மன்னன், ரா.உமாநாத், ராம.நாராயணன், எஸ்.ராஜு ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.
மத்திய அமைச்சர் கோபிநாத் முண்டே மறைவுக்கும் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மவுலிவாக்கம் 11 மாடி கட்டிடம் இடிந்து விழுந்த சம்பவத்தில் ஏற்பட்ட மனித உயிரிழப்புகள், அலமாதி கிராமத்தில் சேமிப்பு கிடங்கில் மதில்சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் நேரிட்ட உயிரிழப்புகள் ஆகியவை குறித்த இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. பின்னர் சட்டசபை கூட்டம் 30 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications