122 தொகுதிகளைக் குறி வைக்கும் தமிழக பாஜக!
சென்னை: தமிழகத்தில் வரும் 2016 சட்டசபைத் தேர்தலில் 122 தொகுதிகளில் வெல்லும் வகையில் தீவிரமாக செயல்பட பாஜக தீர்மானித்துள்ளது.
இதுதொடர்பாக இன்று சென்னை அருகே நடந்த பாஜக பொதுக்குழுக் கூட்டத்திலும் தீர்மானித்து இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

தமிழகத்தில் 234 சட்டசபைத் தொகுதிகள் உள்ளன. இதில் 122 தொகுதிகளை பாஜக குறி வைத்துள்ளது. இந்த வெற்றி இலக்குடன் வரும் சட்டசபைத் தேர்தலுக்குத் தயாராவது என்றும் பாஜக முடிவு செய்துள்ளது.
மோடி தலைமையில் மத்தியில் ஆட்சியைப் பிடித்து விட்ட நிலையில் ஒவ்வொரு மாநிலமாக குறி வைத்து பாஜக காய் நகர்த்தி வருகிறது. மாநிலங்களைப் பிடிக்கும் வேலையை பாஜக தலைவர் அமீத் ஷாவிடம் மோடி ஒப்படைத்துள்ளார்.
அவரது தலைமையில், மகாராஷ்டிரா, ஹரியானா சட்டசபைத் தேர்தல்களில் பாஜக வரலாறு படைத்தது. அதைத் தொடர்ந்து அடுத்து ஜார்க்கண்ட், ஜம்மு காஷ்மீர் மாநிலங்களை பாஜக குறி வைத்துள்ளது.
தற்போது தமிழகத்திற்கும் பாஜக குறி வைத்துள்ளது. திமுக பலவீனமாக உள்ளதாலும், அதிமுக வலுவான முதல்வர் இல்லாமல் தவிப்பதாலும், இதைப் பயன்படுத்தி நடுவில் புகுந்து வெற்றியைப் பறிக்க அது திட்டமிட்டு பல காய்களை நகர்த்தி வருகிறது.
இந்த நிலையில் தற்போது 122 தொகுதிகள் என்ற இலக்கை பாஜக நிர்ணயித்துள்ளது.












Click it and Unblock the Notifications