ஊழல்களால் தலைகுனிவு- முதல்வர் ஓ.பி.எஸ். ராஜினாமா செய்ய தமிழிசை வலியுறுத்தல்!!
சென்னை: அண்ணா தி.மு.க. அரசின் ஊழல்களால் தமிழகத்துக்கு இந்திய அளவில் தலைகுனிவு ஏற்பட்டுவிட்டது; இதற்கு பொறுப்பேற்று முதல்வர் பதவியில் இருந்து ஓ. பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் இன்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:
தமிழகத்தைப் பொறுத்தவரையில் ஊழல் வழக்கினால் முதல்வராக இருந்தவர் பதவி இழந்திருக்கிறார். தற்போது அதே ஊழல் குற்றச்சாட்டினால் அமைச்சராக இருந்தவர் கைதாகி இருக்கிறார்.

இத்தகைய ஊழல் வழக்குகளால் இந்திய அளவில் தமிழகத்துக்கு பெரும் தலைகுனிவாகி விட்டது. இந்த தலைகுனிவுகளுக்குப் பொறுப்பேற்று முதல்வராக இருக்கும் பன்னீர்செல்வம் ராஜினாமா செய்ய வேண்டும்,
வேளாண் அதிகாரி முத்துக்குமராசாமி தற்கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தால்தான் பல உண்மைகள் வெளியே வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications