இலங்கைத் தமிழர்களுக்கு துரோகம் செய்த காங்கிரசுடன் விஜயகாந்த் சேர மாட்டார்: பொன். ராதாகிருஷ்ணன்
சென்னை: இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த காங்கிரஸ் மற்றும் அதற்கு துணை போன கட்சிகளுடன் விஜயகாந்த் கூட்டணி சேரமாட்டார் என்று பாஜக மாநிலத் தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் நம்பிக்கையுடன் கூறினார்.
மதிமுக உடன் பாஜக அதிகாரப்பூர்வமான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை தொடங்கியுள்ளது. பேச்சுவார்த்தைக்குப் பிறகு வைகோ, பொன்.ராதாகிருஷ்ணன் இருவரும் செய்தியாளர்களை சந்தித்தனர்.

சென்னையில் மோடி
அப்போது பேசிய பொன்.ராதாகிருஷ்ணன், பிப்ரவரி 8-ம் தேதி மோடி பங்கேற்கவுள்ள சென்னை பொதுக்கூட்டத்தில் வைகோவும் மதிமுகவினரும் பங்கேற்க அழைப்பு விடுத்துள்ளோம்.
பிரம்மாண்ட கூட்டணி
எங்கள் கூட்டணி தமிழகத்தில் முதல் அணியாக உள்ளது. வரலாறு காணாத ஊழல், மீனவர்கள் பிரச்சினை, இலங்கைத் தமிழர்களுக்கான வாழ்வுரிமை மறுப்பு போன்ற பல்வேறு துரோகங்கள் செய்த காங்கிரஸ் கட்சியை இந்தத் தேர்தலில் வீழ்த்துவோம்.
தேமுதிக உடன் பேச்சு
தேமுதிகவின் 2-ம் கட்ட தலைவர்களிடம் கூட்டணி குறித்து பேசி வருகிறோம். இலங்கைத் தமிழர்களைக் கொன்று குவித்த காங்கிரஸ் மற்றும் அதற்கு துணை போன கட்சிகளுடன் விஜயகாந்த் சேர மாட்டார்.
தேமுதிகவிற்கு ராஜ்யசபா எம்.பி பதவி
தேமுதிகவுக்கு மாநிலங்களவை எம்.பி. பதவி அளிப்பது குறித்து, கட்சியின் அகில இந்தியத் தலைமைதான் முடிவெடுக்கும் என்றனர்.












Click it and Unblock the Notifications