முதல்வர் ஓபிஎஸ் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்
முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை: முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவையின் அவசர கூட்டம் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் தமிழகத்தில் நிலவும் வறட்சி, விவசாயிகள் தொடர் தற்கொலை குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பொய்த்துவிட்டதால் மாநிலம் முழுவதும் வறட்சி நிலவுகிறது. வறட்சியால் பயிர்கள் கருகியதால் 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தலைமையில் தமிழக அமைச்சரவை இன்று அவசரமாக கூடுகிறது.

காலை 9 மணிக்கு துவங்கும் இந்த கூட்டத்தில் தமிழகத்தில் நிலவும் வறட்சி, விவசாயிகளின் தொடர் மரணம் பற்றி விவாதிக்கபட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் மீனவர்கள் பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு முக்கிய விசயங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
2017-18 ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளது.தமிழகத்தில் நிலவும் பரபரப்பான அரசியல் சூழலில் அமைச்சரவை கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications