காவிரியின் குறுக்கே அணை - கர்நாடகாவுக்கு அனுமதி தர வேண்டாம்: பிரதமருக்கு முதல்வர் ஓபிஎஸ் கடிதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி தர வேண்டாம் என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கடிதம் அனுப்பியுள்ளார்.
காவிரியின் குறுக்கே 2 அணைகளை கட்டுவொம் என்று நேற்று பெங்களூருவில் கர்நாடகா அமைச்சர் பட்டீல் அறிவித்திருந்தார். இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.

இதனைத் தொடர்ந்து இன்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அதில், காவிரியின் குறுக்கே அணை கட்டுவதற்கு கர்நாடகாவுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்.












Click it and Unblock the Notifications