வாழ்த்துக்கு நன்றி தெரிவித்த மோடிக்கு எடப்பாடி பழனிச்சாமி நன்றி.. முதல்வராக முதல் கடிதம்
தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி நன்றி கூறி கடிதம் அனுப்பியுள்ளார். முதல்வர் என்ற வகையில் அவர் எழுதிய முதல் கடிதம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை: தமிழக முதல்வராக எடப்பாடி கே.பழனிச்சாமி நேற்று பதவி ஏற்றார். அதையொட்டி அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி போனில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிலையில், தனக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கே.பழனிச்சாமி நன்றி கூறி கடிதம் அனுப்பியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வராக பதவி ஏற்றுள்ள எனக்கு பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் தெரிவித்த உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக எங்களது பெரும் மதிப்பிற்குரிய தலைவர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் தொலைநோக்கு திட்டங்களுக்கு தங்களின் ஒத்துழைப்பும், ஆதரவும் தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிச்சாமி, தமிழக முதல்வர் என்ற வகையில் எழுதிய முதல் கடிதம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications