ராஜ்யசபா தேர்தலில் 'ஸ்பெக்ட்ரம்' தெரியலையோ?: கருணாநிதிக்கு ஞானதேசிகன் கேள்வி
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் ஆதரவு கேட்டபோது ஸ்பெக்ட்ரம் வழக்கு கண்முன்னே தெரியவில்லையா? என்று திமுக தலைவர் கருணாநிதிக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கேள்வி விடுத்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி நேற்று திட்டவட்டமாக அறிவித்திருந்தார். இது தொடர்பாக இன்று தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் கூறுகையில், தி.மு.க.வுடன் கூட்டணி வைக்க ஆர்வம் காட்டும் நிலையில் காங்கிரஸ் இல்லை.
ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கு சி.பி.ஐ வசம் உள்ளது. காங்கிரசை காயப்படுத்தும் விதத்தில்கருணாநிதி பேசியது வருத்தத்திற்குரியது. ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்கு ஆதரவு கேட்கும்போது கருணாநிதிக்கு ஸ்பெக்ட்ரம் வழக்கு தெரியவில்லையா? ஸ்பெக்ட்ரம் வழக்கை காரணம் காட்டுவதை ஏற்றுக் கொள்ள முடியாது.
தமிழகத்தில் காங்கிரஸ் இயக்கத்தை பலப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றார்.