சத்தீஸ்கர் தேர்தல் வன்முறை- பலியான சி.ஆர்.பி.எப். வீரர் தமிழகத்தைச் சேர்ந்தவர்!
கன்னியாகுமரி: சத்தீஸ்கர் மாநிலத்தில் நேற்று முதல் கட்ட தேர்தலின் போது மாவோயிஸ்டுகளின் தாக்குதலில் பலியான சி.ஆர்.பி.எப். வீரர் தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த ஜாண் கிளெமண்ட் என்பது தெரியவந்துள்ளது.
சத்தீஸ்கர் மாநில சட்டசபை தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. மாவோயிஸ்டுகளின் அச்சுறுத்தலால் அங்கு மத்திய பாதுகாப்புபடையினரும், ராணுவத்தினரும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
வாக்குப் பதிவின் போது பல இடங்களில் மாவோயிஸ்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. இதில் சி.ஆர்.பி.எப். வீரர் ஒருவர் பலியானதாக கூறப்பட்டது.

தற்போது இறந்த வீரர் கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல்லை அடுத்த பாலூர் கம்பிளார் பகுதியைச் சேர்ந்த வர்கீஸின் மகன் ஜாண் கிளெமண்ட் என தெரியவந்துள்ளது.கிளமெண்ட் மனைவி மேரி ஜோஸ்பின் கில்டாபாய். இவர்களுக்கு டிர்ஜின் ஜோசப் என்ற மகனும், டிபிசிலின் ஜோஸி என்ற மகளும் உள்ளனர்.
கிளமண்ட் நேற்று தேர்தல் பாதுகாப்பு பணிக்கு சென்ற தகவலை காலையில் மனைவியிடம் போனில் தெரிவித்துள்ளார். மாலையில் அவர் இறந்து போன தகவலை சி.ஆர்.பி.எப். உயர் அதிகாரிகள் கிளமண்ட் குடும்பத்தினருக்கு தெரிவித்தனர். இதனால் கிளமண்ட்டின் மனைவி மற்றும் குழந்தைகள் அலறி துடித்தனர். கிளமெண்ட் மரண செய்தி கேட்டதும் அந்த ஊரே சோகத்தில் மூழ்கியது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications