ஜிஎஸ்டியால் தமிழகத்திற்கு நல்ல பலன்... பட்ஜெட் உரையில் ஓபிஎஸ்
ஜிஎஸ்டி வரியால் தமிழகத்திற்கு நல்ல பலன் ஏற்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
Recommended Video

சென்னை : ஜிஎஸ்டி வரியால் தமிழகத்திற்கு நல்ல பலன் ஏற்பட்டுள்ளதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார். கடந்த 8 மாத காலத்தில் 14% வளர்ச்சி விகிதத்துடன் எதிர்பார்க்கப்பட்ட வருவாய்க்கும் கிடைக்கப்பெற்ற வருவாய்க்கும் இடையேயான இடைவெளி கணிசமாக குறைந்து வருவதால் ஜிஎஸ்டியால் நமது மாநிலம் நல்ல பலனை பெற்று வருகிறது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்திலுள்ள மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் நிலையான விலைகளின் அடிப்படையில் 2017- 2018ம் ஆண்டில் 8.01 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாநில பொருளாதாரத்தில் காணும் சாதகமான சூழலாலும், முதன்மை துறைகளில் செய்யும் முதலீடுகள், தொழிற்துறை ஊக்குவிப்புகளால் 2018-19ம் ஆண்டில் மாநில பொருளாதார வளர்ச்சி விகிதம் 9 சதவீதமாக உயரும் என்று கருதப்படுகிறது.

தமிழகத்திலுள்ள மொத்த உற்பத்தி வளர்ச்சி விகிதம் நிலையான விலைகளின் அடிப்படையில் 2017- 2018ம் ஆண்டில் 8.01 ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மாநில பொருளாதாரத்தில் காணும் சாதகமான சுழலாலும், முதன்மை துறைகளில் செய்யும் முதலீடுகள், தொழிற்துறை ஊக்குவிப்புகளால் 2018-19ம் ஆண்டில் மாநில பொருளாதார வளர்ச்சி விகிதம் 9 சதவீதமாக உயரும் என்று கருதப்படுகிறது.
பொருட்கள் மற்றும் சேவை வரி விதிப்பு முறை 2017 மாதம் ஜூலை 1 முதல் நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய வரி விதிப்புகளின் போது மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பினை 5 ஆண்டுகள் வரை மத்திய அரசு ஈடு செய்யும்.
ஜிஎஸ்டியின் கீழ் 2017 ஜூலை முதல் பிப்ரவரி 2018 வரை ரூ. 632 கோடி இழப்பீடாக தமிழக அரசு மத்திய அரசிடம் இருந்து பெற்றுள்ளது. கடந்த 8 மாத காலத்தில் 14% வளர்ச்சி விகிதத்துடன் எதிர்பார்க்கப்பட்ட வருவாய்க்கும் கிடைக்கப்பெற்ற வருவாய்க்கும் இடையேயான இடைவெளி கணிசமாக குறைந்து வருவதால் ஜிஎஸ்டியால் நமது மாநிலம் நல்ல பலனை பெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications