தமிழகத்தில் இதுவரை ரூ.14.28 கோடி பணம் பறிமுதல்: தேர்தல் அதிகாரி தகவல்
சென்னை: தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதி முறைகளை மீறி 25-ம் தேதி வரை உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.14.28 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-
தமிழ்நாடு பொது தேர்தலையொட்டி, தேர்தல் நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தும் பறக்கும் படையினர் 24.3.16 அன்று சோதனையின்போது, புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ.6.41 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் 25.3.16 அன்று நடத்தப்பட்ட சோதனையில் வேலூரில் ரூ.1.30 லட்சம், திருவண்ணாமலையில் 340 சிமெண்ட் மூட்டைகள், நீலகிரி மாவட்டத்தில் ரூ.5.20 லட்சம், நாகப்பட்டினம் மாவட்டத்தில் ரூ.4.50 லட்சம், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.1.19 லட்சம், மதுரை மாநகரில் மதுவகைகள் உட்பட மொத்தம் ரூ.12,19,000/- ரொக்கம் கைப்பற்றப்பட்டது.
நிலையான கண்காணிப்புக் குழுவினர் 24.3.316 அன்று சோதனை மேற்கொண்டபோது, கன்னியாகுமரி மாவட்டத்தில் ரூ.1.25 லட்சம், சென்னையில் ரூ.2.85 லட்சம், விருதுநகரில் ரூ.1.60 லட்சம், பெரம்பலூரில் ரூ.1.63 லட்சம், திருச்சி மாநகரில் 224 பிரஸ்டிஜ் குக்கர்கள், சிவகங்கையில் ரூ.2 லட்சம், கோவையில் ரூ.2.15 லட்சம் பிடிபட்டன.
மொத்தம் ரூ.11.48 லட்சம் ரொக்கம் 24.3.16 அன்றும், 25.3.16 அன்றைய சோதனையின்போது நீலகிரி மாவட்டத்தில் ரூ.1.18 லட்சம், பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.1 லட்சம், விருதுநகர் மாவட்டத்தில் ரூ.1.35 லட்சம், சேலம் நகரில் ரூ.56,56,820/- திருப்பூர் நகரில் ரூ.1.25 லட்சம் என மொத்தம் ரூ.62.33 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
26.3.16 வரை தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக 2, 23,634 புகார்கள் பெறப்பட்டதில் 1,73,718 புகார்களில் சுவர் விளம்பரங்கள் அழிக்கப்பட்டது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications